Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தஞ்சை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலை பேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கும்பகோணத்தில் நேற்று இரவு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தஞ்சை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை செய்ததில் வெடி குண்டு ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் கும்பகோணம் அருகே அவணியாபுரத்தில் இருந்து அந்த செல்போன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அந்த செல்போன் அழைப்பை விடுத்தது யார் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவணியாபுரத்தைச் சேர்ந்த நசீர் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் எச்சரிக்கை விடுத்து விடுவித்தனர்.